கம்ப ராமாயணம் – மூலம், உரை, மொழிபெயர்ப்பு
June 1, 2008
- ஹரி கிருஷ்ணன்
கம்பர்
இயற்றிய
இராமாவதாரம்
(கம்பராமாயணம்)
பாயிரம்
கடவுள் வாழ்த்து
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 1
சொற்பொருள்: அலகு – அளவு
எல்லா உலகங்களையும் ‘உள’ எனும்படியாக ஆக்கல், அவற்றைத் தத்தம் தன்மையில் தொடரச் செய்தல், அழித்தல் ஆகிய முடிவற்ற விளையாட்டுகளைத் தொழில்களாக உடையவர் எவரோ அவரே தலைவர். நாம் அவரையே சரண் அடைகிறோம்.
Translation: We surrender unto our Lord who indulges in the endless games of Materialising, Establishing and Destroying all (that is known as) the Worlds.
Elucidation: It is He who makes ‘Existence’ from ‘Nothingness’; Protects, Saves and Maintains; and brings about the Destruction of all this that is known as the Worlds, Galaxies and the Universe. These are the Games Endless that He indulges in. We surrender unto Him.
சிற்குணத்தர் தெரிவு அரு நல்நிலை
எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள்
முற் குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. 2
சொற்பொருள்: சிற்குணத்தர் – அறிவு என்னும் குணத்தை உடையவர்; ஞானியர். எண்ணிய மூன்றினுள்: சத்வ, ராஜஸ, தாமஸ குணங்கள் மூன்றனுள். முற்குணத்தவர் சத்வ குணத்தவர்
மிகச் சிறந்த ஞானியர்களாலேயே உணர முடியாததாகிய ஈசனுடைய தன்மையை என்னாலா சொல்ல முடியப் போகிறது! அது எனக்கு மிகவும் அரிதாகிய ஒன்று. சத்வம், ராஜஸம், தாமஸம் எனப்படுபவனவற்றுள் முதன்மையாகிய சத்வ குணம் நிறைந்தவரே தேவர்கள் அனைவருக்கும் முதன்மையானவர். அப்படிப்பட்டவரின் நற்குணம் என்னும் கடலில் மூழ்கிக் குளித்தல் நன்மையைத் தரும்.
Comments
Post a Comment